மும்பை விமான நிலையத்துக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்க ஏர் இந்தியாவுக்கு அதானி நோட்டீஸ்

அதானி குழுமம் நிர்வகிக்கும் மும்பை விமான நிலையத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களை ஒப்படைக்குமாறு  ஏர் இந்தியா நிறுவனத்துக்கு  அதானி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை கலினா மற்றும் சஹர் பகுதியில் விமான நிலையத்திற்கு சொந்தமான 7 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிமனை, சரக்குகளை கையாளும் கிடங்குகள், ஆயிரத்து 600 குடும்பங்கள் வசிக்கும் 4 ஊழியர் குடியுருப்புகள் உள்ளிட்டவை உள்ளதாக மும்பை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இடங்களை பயன்படுத்த விமான நிலைய நிர்வாகத்திற்கு குறைந்த அளவிலான குத்தகை கட்டணத்தை  ஏர் இந்தியா செலுத்தி வருவதாகவும், தற்போது உள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் விமான நிலைய நிர்வாகம் கட்டணம் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.