பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் செயல்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறும்போது, “பாகிஸ்தானில் பணிபுரிந்த குலாப் சிங் ஷாஹீன் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஷாஹீன் எங்கு உள்ளார் என்பது குறித்து உடனடியாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.