“தமிழகம் கேட்ட நிவாரண நிதியை ஒதுக்க பாஜக அரசு மறுத்தது தெளிவு” – செல்வப்பெருந்தகை

சென்னை: “தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். மேலும், “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட … Read more

சந்தேஷ்காலியில் சிபிஐ சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் புகார்

கொல்கத்தா: மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல் நாளில் (ஏப்.26) சிபிஐ சட்டவிரோதமாக சோதனை நடத்தி உள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் விவரம்: “2024 மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் (ஏப்.26) அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சந்தேஷ்காலியின் … Read more

‘ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு’ – ரஃபா தாக்குதலுக்கு முன் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் கெடு

டெல் அவிவ்: காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் எல்லைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கவுள்ள நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 34 … Read more

‘தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தேவை” – இந்து முன்னணி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்துக்காக மக்கள் உடனடியாக திரள வேண்டும். இந்த விஷயத்தில் செயலற்ற தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திமுகவைச் சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ் தனக்கு சொந்தமான காரில் 600 கிலோ குட்கா கடத்தியது சிவகிரி சோதனை சாவடியில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி தென்காசி … Read more

“இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்” – அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே

கவுகாத்தி: அமேதி, ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை தெரிந்துகொள்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்கே, “இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். அனைத்துக்கும் பதில் கிடைக்கும். வயநாட்டில் உள்ள மக்கள், ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். அதனால்தான் … Read more

“மத்திய அரசு யானை பசிக்கு சோளப் பொறி போல் தமிழகத்துக்கு நிதி அளிக்கிறது” – ஜெயக்குமார் சாடல்

சென்னை: தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது … Read more

பிஹாரில் இருந்து உ.பி.க்கு அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு: போலீஸ் விசாரணை

லக்னோ: பிஹார் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு பேருந்தில் சட்டவிரோதமாக அழைத்துவரப்பட்ட 95 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் பெற்றோரின் ஒப்புதல் அவசியம். ஆனால் அப்படியான ஒப்புதல் ஏதுமில்லாமல் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதால் அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பிஹார் மாநிலம் ஆராரியா பகுதியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இரண்டு அடுக்குகள் கொண்ட பேருந்து ஒற்றில் 95க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தி செல்லப்படுவதாக குழந்தைகள் … Read more

தமிழகத்தின் மிக்ஜாம் புயல், கர்நாடகா வறட்சிக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்: கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, … Read more

அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்கள் யார்?- இன்று மாலை அறிவிக்கிறது காங்கிரஸ்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று (சனிக்கிழமை) மாலை அக்கட்சி அறிவிக்கிறது. இதனால், இந்தத் தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ராகுல், பிரியங்கா காந்தியே வேட்பாளர்கள் அவர்கள் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள் என்ற ஊக அடிப்படையிலான செய்திகளும் உலாவரத் தொடங்கிவிட்டன. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் … Read more

முதல்வர் மாலத்தீவு செல்வதாக வெளியான தகவல் தவறு: திமுக

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் தவறானது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல், ஏப்.16-ம் தேதி வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், கடந்த சில தினங்களாக திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, கள … Read more