தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்- பாத்திமாமேரி தம்பதிக்கு ஜூன் 30-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்திம் இரவு வீட்டில் குழந்தைக்கு பாத்திமா மேரி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தையின் உடலில் … Read more

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்

புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால், சில அம்​சங்​களுக்​கான தடை​யுடன் புதிய … Read more

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் | அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ்பாபு சின்னக்கடை பஜாரில் உள்ள தனது கிளினிக்கில் இரவு நேரத்தில் சிகிச்சை அளித்து வருகிறார். நேற்று இரவு 9.30 … Read more

போரை நிறுத்தியதற்கு ட்ரம்ப் மீண்டும் உரிமை கோருகிறார்; மோடி எப்போது மவுனம் கலைப்பார்? – காங். கேள்வி

புதுடெல்லி: “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த 4 நாள் போரை நிறுத்தியது நான்தான். அந்தப் போர் அணு ஆயுத … Read more

14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் … Read more

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: இபிஎஸ் வேதனை

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு … Read more

சீனாவின் புகழ்பாடுகிறார் ராகுல்: பாஜக மூத்த தலைவர் விமர்சனம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சீன ராணுவ தொழில்​நுட்​பத்​தின் புகழ் பாடு​வதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் சீன ராணுவ தொழில்​நுட்​பம், ஆயுதங்​களுக்கு ஆதர​வாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்​களவை கூட்​டத்​தின்​போது, லடாக்​கில் சீனா​வின் மோதல் போக்கை ஆதரிக்​கும் வகையில் ராகுல் பேசி​னார். சீன மாடல் கண்​காணிப்பு ட்ரோன்​களை நாம் ஏன் … Read more

எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற முடியாது: திருமாவளவன் விளக்கம்

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விசிக​வில் தேர்​தல் பணி என்​பது எங்களது களப்​பணி​களில் ஒன்​று. அதுவே எங்​களது முதன்​மை​யான பணி அல்ல. தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்​து​வோம். தற்​போது கட்​சி​யின் மறுசீரமைப்​புக்​கான பணி​களில் கவனம் செலுத்​தப்​பட்டு வரு​கிறது. திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் மார்க்​சிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இருக்​கின்​றன. இந்த கூட்​டணி மிக​வும் கட்​டுக்​கோப்​பாக, உறு​தி​யுடன் இருக்​கிறது. இக்​கூட்​டணி கட்​டுக்​கோப்​பாகவே தேர்​தலை சந்​தித்து வெற்​றி​பெறும். தேர்​தலின் போது அளிக்​கப்​படும் … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: பிஹாரில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்​டுள்ள வாக்​காளர் பட்​டியல் திருத்த பணி​களுக்கு இடைக்​கால தடை​ வி​திக்க உச்ச நீதி​மன்​றம் நேற்று மறுத்​து​விட்​டது. அதே​நேரம், அவசர வழக்​காக விசா​ரிக்க நீதி​மன்​றம் ஒப்​புக்​கொண்​டது. தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள் தாங்​கள் … Read more