மிக்ஜாம் பாதிப்பு | சேதமான வாகனங்களுக்கு விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை வழங்குவதை உறுதி … Read more

“மஹுவாவின் செயல் நெறிமுறையற்றது” – நெறிமுறைக் குழு உறுப்பினர் அபராஜிதா சாரங்கி

புதுடெல்லி: மஹுவா மொய்த்ரா நடந்துகொள்ளும் விதம் நெறிமுறையற்றது என்றும், அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக் குழு உறுப்பினருமான அபராஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார். தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, ”நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணமோ, பொருட்களோ பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. எனது மின்னஞ்சலை பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு உள்ளது. அப்படிப் பார்த்தால் மின்னஞ்சல் … Read more

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான வழக்கில் இருவர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து இரு தொழிளாலர்கள் உயிரிழந்த வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: டிச.4 அன்று 7.30 மணியளவில் கிண்டி – ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG பங்கின் கண்டெய்னராலான … Read more

கோவிட் தடுப்பூசியால் இளம் வயதினரிடையே திடீர் மரணங்கள் அதிகரிக்கவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: கோவிட் தடுப்பூசி இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மன்சுக் மாண்டவியா அளித்த எழுத்துபூர்வ பதில்: ”கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்கள் சிலருக்கு திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டதன் காரணமாகத்தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்த … Read more

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளிக்கிழமை வழங்கினார். மேலும் மழை – வெள்ளத்தால் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த … Read more

“பாஜகவுக்கு எதிராக அடுத்த 30 ஆண்டுகள் போராடுவேன்” – எம்.பி பதவி பறிப்புக்குப் பின் மஹுவா சூளுரை

புதுடெல்லி: ”இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக சூளுரைத்துள்ளார் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா. பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா இன்று (வெள்ளிக்கிழமை) பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் … Read more

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் இன்று (வெள்ளி) மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீட்புக் குழுவில் ஈடுபட்ட நபர் ஒருவர் அளித்த பேட்டியில், ”பள்ளத்தில் மீட்புப் பணிகளுக்காக நாங்கள் வந்தபோது எங்களிடம் … Read more

மிக்ஜாம் புயலால் ரயில் ரத்தாகி உ.பி.யில் சிக்கிய தமிழர்கள் 50 பேரும் இரு மாநில அரசுகளின் உதவியால் வீடு திரும்பினர்

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், விழுப்புரத்தைச் சேர்ந்த 50 பேர் வாரணாசியில் சிக்கினர். இவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளின் உதவியால் வீடு திரும்பினர். கடந்த நவம்பர் 24-ல் விழுப்புரத்திலிருந்து சுமார் 50 பேர் வட மாநிலப் புனிதப் பயணம் கிளம்பினர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களில் 26 பெண்களும், வயதானவர்களும் அடங்குவர். இவர்கள் நவம்பர் 26-ல் வாரணாசிக்கு வந்த பின் அலகாபாத்துக்கும் சென்றனர். பிறகு பிஹாரின் புத்தகயாவுக்கு பேருந்து … Read more

தொழில்நுட்பத்தால் பிற நாடுகளைவிட இந்தியா அதிகம் சாதித்துள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: பிற நாடுகள் ஒரு தலைமுறை காலத்தில் அடையும் வளர்ச்சியை இந்தியா, தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடந்த 9-10 ஆண்டுகளில் அடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கவர்ந்திழுக்கும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்து லிங்க்டுஇன் தளத்தில் பிரதமர் … Read more

மிக்ஜாம் பாதிப்பு | முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பணம் செலுத்த வங்கி விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் … Read more