அவர் மீது கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி… காரணம் இதுதான்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றார்.

எனவே வித்தியாசமான கதைகளுடன் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பலருக்கு விஜய் சேதுபதி உதவிக்கரம் நீட்டி வருகின்றார். தற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துவரும் ஒரே ஹீரோ விஜய் சேதுபதி தான்.

KGF 2 படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு கடந்த சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே தற்போது அவர் நடித்துவரும்
காத்துவாக்குல ரெண்டு காதல்
படத்தை மிகவும் நம்பியுள்ளார்.

விஜய் சேதுபதி

விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில்
சமந்தா
மற்றும்
நயன்தாரா
நாயகிகளாக நடித்துள்ளனர்.
அனிருத்
இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டீசரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

இருப்பினும் விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அதிருப்தியில் இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஏனென்றால் விஜய் சேதுபதி இப்படத்திற்காக கால் ஷீட்டை மாதக்கணக்கில் கொடுத்தாராம்.

ஆனால் விக்னேஷ் சிவன் குறிப்பிட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்காமல் தாமதமாக்கியதால் விஜய் சேதுபதி கடுப்பில் இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன.

நயன்தாரா

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மாதிரி பசங்க கிடைக்கிறது கஷ்டம் – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.