திருப்பதியில் 25-ந்தேதி ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதனால் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதேபோல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை கல்யாண உற்சவம், உள்ளிட்ட ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 61,278 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,585 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.