'குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என உறுதிமொழி பத்திரம் – மீறிய இளைஞருக்கு கிடைத்த தண்டனை

‘குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அதனை மீறியதால் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், 4வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ்(24). இவர் மீது, கஞ்சா கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த மாதம், 11ஆம் தேதி பரங்கிமலை மாவட்ட துணை ஆணையர் பிரதீப் முன் ஆஜராகி, தான் ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்திருந்தார்.
image
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை மீண்டும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால், அவரை, 330 நாட்கள் ஜாமீனில் வெளிவரமுடியாதவாறு சிறையில் அடைக்க பரங்கிமலை துணை ஆணையர் உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.