கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..தாலுகாவை மாற்ற பொதுமக்கள் போராட்டம்.!

மணலூர்பேட்டையை தாலுகாவாக அறிவிக்க திடீரென அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே அனைத்து கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மணலூர்பேட்டையை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இவர்களது இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் செந்தில், சேகர், வெங்கடேசன், கோவிந்தன்., தேமுதிக நிர்வாகிகள் ரமேஷ்., கருணாகரன் பாமக நிர்வாகிகள் விஸ்வநாதன், மணிகண்டன்., அதிமுக ஒன்றிய செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.