நாட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற தொண்டைப் பாராட்டி பிரதமருக்கு விருது…நாட்டு மக்களுக்கே அர்ப்பணிப்பதாக பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற தொண்டைப் பாராட்டி அவருக்குப் பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மும்பைக்கு வந்த பிரதமரை லதா மங்கேஷ்கரின் தங்கையும், பாடகியுமான ஆஷா போஸ்லே பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

லதா மங்கேஷ்கரின் பெயரிலான முதலாவது விருதை அவர் குடும்பத்தினர் வழங்கப் பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், லதா மங்கேஷ்கரைத் தனது அக்கா எனக் கருதுவதாகவும், அவர் பெயரிலான இந்த விருது தன்மீது அவருக்குள்ள அன்பின் அடையாளம் என்றும் தெரிவித்தார். இந்த விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.