மனைவி விட்டு சென்றதால் மூதாட்டியை கொலை செய்த ராணுவ வீரர்..!

மூதாட்டியை கொன்ற ராணுவ வீரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். ராணுவ வீரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதற்கு அவரது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவதன்று, அவரது மகள் வீட்டிலிருந்த முத்தம்மாளுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மூதாட்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காகானுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.