உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டியார் பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சின்னமேரி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் செல்வம் வரவேற்றார். ஆஷா பணியாளர் ஏழைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டியார் பாளையம் தாய், சேய் நல மையத்தின் மருத்துவ அதிகாரி மீனா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு ஏப்., 22ம் தேதி பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாசு ஏற்படுவதால் பூமி பாதிக்கப்பட்டு வருவதாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.