திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு; ஒரே சேலையில் காதலர்கள் தற்கொலை | Dinamalar

ராய்ச்சூர் : காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனம் நொந்த காதலர்கள், ஒரே சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ராய்ச்சூர் சிந்தனுாரின், ஆர்.எச்.3 கேம்பில் வசித்த லவா, 25, கரினா, 20, பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், பெற்றோரின் நெருக்கடிக்கு பணிந்து லவா, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.காதலர் திருமணமானதை அறிந்த கரினா, அதிர்ச்சியடைந்தார். மற்றொரு பக்கம் காதலியை மறக்க முடியாமல், லவாவும் மனம் நொந்தார். எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவு, ஆர்.எச்.3 கேம்ப் அருகில் உள்ள மரத்தில், ஒரே சேலையின் இரண்டு நுனிகளில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டனர்.சிந்தனுார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.