தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை:
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 72 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37-ல் இருந்து 52 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 362 இல் இருந்து 404 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் மட்டும் புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. 
கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.