ஆசியாவை அச்சுறுத்தும் போரை நிறுத்தவேண்டும்| Dinamalar

புதுடில்லி : ”ஆசியாவை அச்சுறுத்தும் உக்ரைன் போரை நிறுத்தி, துாதரக ரீதியில் சமரச பேச்சு நடத்த வேண்டும்,” என, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா சார்பில் டில்லியில் நேற்று நடந்த ஏழாவது ‘ரெய்சினா’ மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று உக்ரைன் போர் மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த போரால் ஆசியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உணவுப் பொருள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே, போரை நிறுத்தி துாதரக ரீதியில் அமைதி பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் வேண்டுகோள். அதற்காகவே நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இம்மாநாட்டில், 90 நாடுகளைச் சேர்ந்த, 210க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.