அக்கா மகன் சரியாக படிக்காததால் அவரது நண்பர்களை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை

நாமக்கலில் அக்கா மகன் சரியாக படிக்காததால் அவரது நண்பர்களை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், இவரது அக்கா மகன் அகிலன், 10ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுரேந்தர் உள்ளிட்ட சில இளைஞர்களுடன் சேர்ந்துக்கொண்டு சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பிரபாகரன், சுரேந்தரிடம் விசாரிக்க சென்றபோது இருவருக்கும் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுரேந்தரின் நண்பர் விக்னேஷ் உள்ளிட்டோர் பிரபாகரனை சரமாரியாக பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் 17 இடங்களில் கத்தி குத்து அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.