பால் பவுடருக்கு தட்டுப்பாடு… தாய்ப்பாலை விற்கும் இளம்பெண்!

உலகம் எங்கும் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பால் பவுடர்தான்.

அமெரிக்காவின் பல குடும்பங்களும் தங்களது கைக்குழந்தைகளுக்கு பால் பவுடரையே பிரதான உணவாக அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இதற்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதுடன், ஆலையை முடியதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்காவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா எனப்படும்
பால் பவுடர்
கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் – ஐ.நா., சொன்ன ஷாக் நியூஸ்!

இந்த நிலையில்தான் யூடாவை சேர்ந்த அலிசா சிட்டி என்ற பெண் தனது தாய்ப்பாலை (சுமார் 118 லிட்டர்) விற்று பல குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். இளம் தாயான அவர், தனக்குச் சுரக்கும் அதிகப்படியான தாய்ப்பாலை கெடாமல் ஃப்ரீஸரில் வைத்து தேவைப்படுவோருக்கு அளித்து வருகிறார்.

ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்பதாக அலிசா சிட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.