வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை.. பணம் திருடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!

சேலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

மல்லூரில் லதா என்பவரின்  இ-சேவை மையத்தில்  13 ஆயிரம் பணத்தையும்  மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு பொருட்கள் கொடுக்கும் ராஜா என்பவரின்  கடையில் 11 ஆயிரம் பணத்தையும் அந்த நபர் திருடிச்சென்றார். புகாரின் அடிப்படையில் மல்லூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.