பா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி பிரமுகர்| Dinamalar

டேராடூன் : உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற அஜய் கொத்தியால், பா.ஜ.,வில் இணைந்தார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

முதல்வர் வேட்பாளராக அஜய் கொத்தியால் களம் இறங்கினார்.இந்த தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அஜய் கொத்தியால், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில பா.ஜ., மாநில தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.