கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

சீனர்களுக்கு விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது.

இதற்கு இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.