சேலத்தில் மளிகைகடை உரிமையாளர் கடத்தல் – போலீசார் தீவிர விசாரணை

சேலம் அருகே ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் பணத்திற்கு பதிலாக வட்டியுடன் சேர்த்து 20 லட்சம் ரூபாய் கேட்டு மளிகை கடை உரிமையாளரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த முல்லாராம் என்பவர் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மகன் ஜெயராம் கடையில் இருந்த போது, அங்கு வந்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை குண்டுகட்டாக தூக்கி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

கார் விற்பனையில் மோசடி செய்த பணத்தை பெறுவதற்காக கார் ஏஜெண்ட் ஒருவர் ரவுடி கும்பல் மூலம் ஜெயராம்-ஐ பெங்களூருக்கு கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.