"ரொம்ப குண்டா இருக்கேன்.. பொண்ணே கிடைக்கல." விஷமருந்தி இளைஞர் தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற 26 வயது நபர், கடந்த மே 31 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி அவர் வீட்டில் கிடந்துள்ளார். 

மகன் மயக்க நிலையில் இருப்பதைக் கண்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தினேஷ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தினேஷ்குமார்க்கு திருமணம் செய்ய  உடல் பருமன் காரணமாக பெண் கிடைக்கவில்லை. இதனால் தனக்கு திருமணம் ஆகாது என்று சோகத்தில் இருந்த தினேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.