அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!

பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 209.86 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 204.15 ரூபாய் ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளதால், பாகிஸ்தான் அரசு ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்து உள்ளனர். மேலும், வரும் திங்கட்கிழமை முதல், நிதியமைச்சகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மாஜி பிரதமர் இம்ரான் மீது தேச துரோக வழக்கு: பாகிஸ்தான் அரசு முடிவு!

பாகிஸ்தானில் விரைவில் பட்ஜெட் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு இடம் பெற வேண்டுமென, அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், அரசு உறுதியளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சம்பள உயர்வுக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.