ஆடு திருட மறுத்த பிளம்பரை தாக்கிய இருவருக்கு வலை

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அருகே ஆடு திருடி தருமாறு பிளம்பரை கட்டையால் தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சுடலை வீதியை சேர்ந்தவர் ஆனந்த்,33; இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் சந்துரு என்கிற சந்திரசேகரன், வேல் என்கிற வேமுருகன்.இருவரும் நேற்று முன்தினம் ஆனந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆடு திருடி தருமாறு கூறி உள்ளனர்.

அதற்கு ஆனந்த் மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டில் இருந்த ஆனந்தை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு மற்றும் வேல்முருகனை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.