கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படும்

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணிவரையான ஏழு மணித்தியால நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது. எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் jilgLk;..

இதேவேளை, கொழும்பு ஒன்று தொடக்கம் கொழும்பு 04 வரையும், கொழும்பு 07 தொடக்கம் கொழும்பு 11 வரையும், கடுவலை பகுதியிலும் இன்றிரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரையான ஒன்பது மணித்தியாலத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.