வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனம் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார். குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தும் என்றும் அதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க … Read more

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, … Read more

மாணவர்களுக்கான  உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம் விரிவு

வெசாக் தினத்தை தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி” எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும் 2024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது  இது தொடர்பாக 25.04.2024 அன்று அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:  … Read more

கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதி

கல்விக்கான ஒத்துழைப்புக்களை பெறும் நோக்கில்  புரிந்துணர்வு ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்காக எமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அல்லது முகவராண்மை நிறுவனங்களுக்கிடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க, அனர்த்தங்களுக்கான மீட்சித்திறன் மற்றும் இயற்கை வளங்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான பல்நோக்கு ஆய்வுகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சல்ஃபர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொனறை … Read more

அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றி கண்காணிப்பதற்கு  ஆலோசனைக் குழு

அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கண்காணிப்பு செய்வதற்காக சமுதாய ஆலோசனை குழுவொன்று தொண்டர் அடிப்படையில் நியமிப்பதற்காக மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பாக 25.04.2024  அன்று  அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 12. அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றிய கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை … Read more

எரிபொருள் பிரிவிற்காக புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் , விமானத்திற்கான எரிபொருள், திரவ நிலை எரிவாயு மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் உட்பட மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை சட்ட விதிகளின் கீழ்  நடைமுறைப்படுத்தப்படும்  போது  பரவலாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறை இன்மைச் செயற்பாடு காணப்படுகிறது.  தனியார் நிறுவனங்கள் பல எரிபொருள் உற்பத்தி இறக்குமதி மற்றும் விநியோகம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இந்தப் பிரிவின் அனுபவங்களுக்கு தீர்வு தேடும் விதமாக உற்பத்தியின் தரத்தை  அதிகரித்தல் மற்றும் … Read more

ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் தலைமையில் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு

உலகளாவிய தென் பிராந்திய நாடுகள் தங்கள் சொந்த பலத்தில் கட்டியெழுப்ப வேண்டும். • உமாஓயா திட்டம் எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈரான்-இலங்கை ஒத்துழைப்பின் அடையாளமாகும் – இலங்கை ஜனாதிபதி • இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதில் எல்லையோ தடையோ இல்லை – ஈரான் ஜனாதிபதி காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் … Read more

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் அமைந்துள்ள ஜப்பானிய உணவகமான ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi)ஜப்பானிய உணவகத்தை (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். 1995 ஆம் ஆண்டு காலி முகத்திடல் டெரஸில் நிறுவப்பட்ட முதலாவது நிஹொன்பஷி ஜப்பானிய உணவகம், பிரபல சமையல் கலைஞரான தர்ஷன முனிதாஸவினால் நாட்டிற்கு அளிக்கப்பட்ட முன்னணி உணவகமாகும். கடந்த 29 ஆண்டுகளாக, இந்த உணவகம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான ஜப்பானிய உணவை ருசிக்கும் வாய்ப்பை வழங்கியது.   தற்போது இந்த உணவகம் காலிமுகத் … Read more

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம் -ஜனாதிபதி

• கொழும்பு சுற்றுலா நகரமாக மாற்றப்படும். மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார். கொழும்பு ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டிடத்தை நேற்று (25) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். காலி முகத்திடலுக்கு முன்பாக … Read more

30ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள க.பொ.த சாதாரண பரீட்சை மே மாதம் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேவேளை, அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் … Read more