மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 27ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 26ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய … Read more

வடமாகாணத்தில் உள்ள நலிவுற்றவர்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டங்கள் …

வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நலிவுற்றவர்கள் மற்றும் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக வேலைத்திட்டங்கள் வடமாகாண சபையின் பல்வேறு நிறுவனங்களினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. இதற்கான ஒரு நடவடிக்கையாக, விசேடமாக மாகாண சபையினூடாக இவ்வருடம் உள்ளாசத்துறைக்கு 200 மில்லியன் … Read more

வடக்கில் சுமார் 97% சதவீதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பூர்த்தி

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் சுமார் 97ம% சதவீதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26.07.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார். மிகுதியாக உள்ளவற்றில் முகமாலை, கிளிநொச்சி பகுதியிலே மக்கள் மீள் குடியேற்றப்படவேண்டிய காணிகள் உள்ளன. ஏனையவை விவசாய வயல் நிலங்களாகும். எதிர்காலத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் மேலும் … Read more

டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை கொழும்பில்

இலங்கை தொழிலாளர்களுக்கு தேவையான டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்நடமாடும் சேவை நாளை 27 மற்றும் 28 நாளை மறுதினம் ஹோமாகம பொது விளையாட்டரங்கில் இடம்பெறும். கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை தொழில்வாய்ப்புக்களை தேடுவோர் மற்றும் பணியில் கடமையாற்றுபவர்களுக்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் சமூகத்தில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை … Read more

வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு..

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிக விலை கொடுதது பழங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார். வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு … Read more

முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு சகல நடவடிக்கையையும் எடுக்கவும் 

கடந்த இரண்டு வருட காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பாதுகாப்பு … Read more

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் X-Ban – 2024 கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி ரணில் தலைமையில் அங்குரார்ப்பணம்

பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டுவதற்கு பிரத்தியேக கண்காட்சி கூடம் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் 106 வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் X-Ban – 2024 கல்வி, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஜனாதிபதி ரணில் தலைமையில் அண்மையில் (24) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பசுமைப் பொருளாதாரம் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல், சமூகப் பல்வகைமை ஊடாக ஒத்துழைப்பை விரிவு படுத்தல், தினசரி வாழ்வில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் … Read more

எட்டாவது சீன – தெற்காசிய கண்காட்சியில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 21 முதல் 25 வரை சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் எட்டாவது சீன-தெற்காசிய கண்காட்சியில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரியங்கர ஜயரத்ன, கௌரவ எம்.எஸ்.தௌபீக் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றிய சபாநாயகர் அபேவர்தன குறிப்பிடுகையில், சீன-தெற்காசிய கண்காட்சி 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து … Read more

தாழையடி நீர்விநியோக திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் திகதி திறப்பு

தாழையடியில் நடைமுறைப்பட்டுவருகின்ற நீர் விநியோக திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் இன்று (26.07.2024) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற நேர்காணலின் போது குடிநீர் விநியோக திட்டம் மற்றும் சூரிய மின்படல வீட்டுத்திட்டம் போன்ற … Read more

வட மாகாணத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள்…

வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… வட மாகாணத்தில் காணப்படுகின்ற வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு … Read more