வடமேற்கு, மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த 3 நாளுக்கு அனல்காற்று வீசும் – வானிலை ஆய்வுத்துறை தகவல்!

நாட்டின் வடமேற்குப் பகுதியிலும் நடுப்பகுதியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, உட்புற ஒடிசா, சத்தீஸ்கர், தெற்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.