ஊராட்சி அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்திய ஊழியர் பணிநீக்கம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக கூறப்படும் தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சாமல்பட்டியை சேர்ந்த சுதாகர் என்ற அந்த நபர் 4 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு பிரிவில் டேட்டா எண்டிரி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

சுமார் 20 நாட்களுக்கு முன் அவரது செல்போனை உறவினர் ஒருவர் ஆராய்ந்த போது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகள் இருந்துள்ளன.

அதிர்ச்சி அடைந்த அந்த நபர், சுதாகரின் செல்போனை சம்பந்தப்பட்ட அலுவலக பி.டி.ஓ-விடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து, கழிவறை மின் விளக்கில் பொருத்தப்பட்டிருந்த அந்த ரகசிய கேமரா மற்றும் சுதாகர் பயன்படுத்திய கணிணியின் ஹார்ட் டிஸ்க் அகற்றப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.