போதை விற்ற இருவருக்கு இரண்டு ஆண்டு சிறை

பெங்களூரு : நகரில் போதைப்பொருளை சேகரித்து வைத்து, விற்பனை செய்ய முயற்சித்து, போலீசாரிடம் சிக்கிய இருவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெங்களூரின், சுத்தகுன்டேபாளையா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், ஆஷிஸ் ஆயில் என்ற போதைப்பொருளை, பதுக்கி வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.

2017 ஜூலை 7ல், போலீசார் சோதனையிட்டு, கேரளாவை சேர்ந்த ஜான்சன் ஜோசப், 31, பிஜு ஆபிரஹாம், 38, ஆகியோரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, 6.777 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையை முடித்த போலீசார், 33 வது கூடுதல் சிட்டி சிவில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது. அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.