மதுரை: அவனியாபுரத்தில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் விரைந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களின் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.