இந்தியாவில் மேலும் 6,594 பேருக்கு கோவிட்| Dinamalar


புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,594 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 6,594 பேருக்கு கோவிட் உறுதியானதால், மொத்த பாதிப்பு 4,32,36,695 ஆனது. தற்போது, 50,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் 0.12 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் விகிதம் 98.67 ஆக உள்ளது. கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,61,370 ஆனது. இறப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. இதுவரை 195.35 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.