திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறை முடிந்த பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரமாக காத்திருந்து தரிசனம் மேற்கொள்கின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியலில் விழும் காணிக்கை பணத்தை எண்ணும் நிகழ்வு தினந்தோறும் நடைபெறும். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதாவது, நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்துவந்தது.
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறை முடிந்த பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.