’இளையராஜா எனும் நான்… கடவுளின் பெயரால்…’ : எம்.பியாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!

மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்குவது பாரம்பரியம். அந்த வகையில் தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றிய இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
அதன்படி, இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை பிற்பகலில் கூடியதும் முதலில் இளையராஜா பதவியேற்பு நடைபெற்றது. “கடவுளின் பெயரால்” எனக் கூறி உறுதிமொழி எடுத்து தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற நாளில் இளையராஜாவும் பதவியேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா எம்.பியாக பதவியேற்ற காணொலி:
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/HYwZh1iS6os” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.