மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா… வீடியோ

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நியமன உறுப்பினராக இளையராஜா தேர்ந்துக்கப்பட்டதாக ஜூலை 6 ம் தேதி அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்றம் கடந்த வாரம் கூடிய நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளையராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

‘கடவுள் மீது ஆணையாக’ என்று குறிப்பிட்டு பதவி ஏற்றுக்கொண்ட இளையராஜா தமிழில் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.