மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர் காலமானார்

1980களில் முன்னணியில் இருந்த மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இகாகினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. இதை தொடர்ந்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட பல படங்களை இயக்கினார்.

பின்னர் சொந்தமாக படம் தயாரித்த பணிக்கர் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் தொடங்க இருந்த நேரத்தில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக படத்தை தொடங்காமல் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நோய் தாக்கம் அதிகமாகவே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.