மியான்மருக்கு ஷேக் ஹசீனா வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி : ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என மியான்மர் அரசுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பேச்சலட்டை சந்தித்து பேசினார்.

பின்னர் ஷேக் ஹசீனா கூறியது, ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் நாட்டு குடிமகன்களாக ஏற்க மியான்மர் அரசு மறுக்க கூடாது. அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான கல்வி, உறைவிடம், பணி போன்றவற்றை செய்து தருமாறு மியான்மரை மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.