அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளை எச்சரித்த போலீசார்.!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளை போலீசார் எச்சரித்தனர்.

கோவில்பட்டியில் இருந்து புதியம்புத்தூர் வரை செல்லும் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் படியில் தொங்கியடி பயணம் செய்வதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் பேருந்தில் படியில் தொங்கியபடி வந்தவர்களை எச்சரித்தனர்.

படியில் தொங்கியபடி பயணிப்பதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துக்கூறிய போலீசார், மீண்டும் அவ்வாறு பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.