பீகார் அமைச்சர் பதவி விலகல்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திக் குமார் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் மீது 2014ம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கார்த்திக் குமாரை பதவி நீக்க வேண்டும் என்று பாஜ தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, அவரிடம் இருந்த சட்டத்தை துறை பறிக்கப்பட்டு, கரும்பு தொழில்துறை வழங்கப்பட்டது. இருப்பினும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜ போராட்டமும் நடத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களில் கார்த்திக் குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது கரும்பு தொழில்துறை அமைச்சகம் வருவாய் மற்றும் நில சீர்திருத்ததுறை அமைச்சர் அலோக்குமாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.