சமூக வலைதளங்களில் விளம்பரம்.. பிரபலங்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடு..!

தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.

இவைகளில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்று பிரபலமாக உள்ளோர் சமூக வலைதளங்களில் சில பொருட்களை வாங்கும்படி பரிந்துரை செய்கின்றனர். இவ்வாறு பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான தங்களுக்குள்ள தொடர்பு குறித்து அவர்கள் பதிவிட வேண்டும்.

ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு முன், அதில் மற்ற பயனாளிகளின் விமர்சனங்களை பெரும்பாலானோர் பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட பொருளை வாங்குகின்றனர்.

இந்த விஷயத்தில், பல விமர்சனங்கள், பரிந்துரைகள் போலியானவையாக உள்ளன. இவ்வாறு பொய்யான, போலியான பரிந்துரைகள் பதிவிடுவதை தடுக்கவும், கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.