இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு..!- அரச குடும்பத்தில் நிறவெறி சர்ச்சை..!

வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் அரசின் முதல் இறுதி சடங்கு ராணி எலிசபெத்தின் இறுதி சடங்காகும். இதற்கு பல்வேறு உலக நாடுகளை சார்ந்த தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . இங்கிலாந்து நாடு முழவதுமே ராணி மறைவையொட்டி சோகத்தில் மூழ்கி உள்ளது.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

1965 ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் அரசின் முதல் இறுதி சடங்கு இதுவாகும். ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்காக கணவர் ஹாரியுடன் இங்கிலாந்து வந்துள்ள மேகன் மார்கல், இதுதான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது.

பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். அரச குடும்பத்தில் இருந்த நிறவெறி சர்ச்சையால் அரண்மனையில் இருந்தும், தாங்கள் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்றும் ஹாரி – மேகன் தம்பதி அறிவித்து வெளியேற்றினர் என்பது அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.
வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் அரசின் முதல் இறுதி சடங்கு ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு என்பதால் பலரும் ராணியின் இறுதி சடங்கு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.