பா.ஜ., பிரமுகர் மகன் கைது| Dinamalar

டேராடூன்: உத்தர்காண்டில் இளம் பெண் கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலம் ஹரிதுவாரைச் சேர்ந்தவர் வினோத் ஆர்யன்,இவர் ஆளும் கட்சி வாரிய தலைவராக உள்ளார். இவரது மகன் புல்கித் ஆர்யா, அங்கு பவுரி மாவட்டத்தில் ரிசார்ட் நடத்தி வருகிறார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் கடந்த திங்களன்று காணாமல் போனார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று புல்கித் உள்ளிட்ட மூவரை விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அப்பெண்ணை வினோத் ஆர்யா மகன் புல்கித் ஆர்யா உள்பட இருவர் கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.