மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டிய கணவர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த ராம்ஜி ஷர்மா (36) என்பவர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். பண்டிகை காலம் வருவதால் துணி எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மனைவி சாந்தினி தேவியிடம் ரூ.2000 கொடுத்து வைத்துள்ளார்.

தற்போது அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால், தான் கொடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.500 கேட்டுள்ளார். சாந்தினி தேவியோ அவ்வளவு பணம் உங்களுக்கு எதற்கு என்று கேட்கவே அதற்காக சரியான காரணத்தை ராம்ஜி கூறவில்லை.

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த ராம்ஜி பணத்தை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். மனைவியோ கணவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

தனது அறைக்கு சென்ற ராம்ஜி கதவை பூட்டி வைத்து மனைவியின் சேலையை எடுத்து தூக்கு மாட்டி மிரட்டியுள்ளார். இருப்பினும் மனைவி அதனை கவனிக்காமல் தனது வேலையை பார்த்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அவரது கால் இடறியதில் நிலைதடுமாறி அவரது கழுத்து சேலையில் சிக்கிக்கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அறைக்கு வந்து பார்த்த மனைவி, தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டதும் கதறி அழுதுள்ளார்.

அக்கம்பக்கத்தினரை அழைத்து கணவரின் உடலை கீழே இறக்கி, காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து மனைவி சாந்தினி தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.