உச்சத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் – மக்கள் வேதனை!!

தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

இதனால், தனியார் சொகுசு பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளில் கட்டணம் உச்சம் தொட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் பல மடங்காக உள்ளது.

சென்னையில் இருந்து நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. 3,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பஸ்களின் அதிகபட்ச கட்டணம் ரூ. 2,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் சொகுசு பஸ்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதால் தசரா பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.