அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியரால் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் பூட்டிய ஊழியர்கள்!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது குறித்து கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக சாம்பல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி 18 மணி நேரம் வகுப்பறைக்குள்ளே சிக்கிய சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.