2023 ஜனவரி இறுதியில் கூட்டத்தொடர் நடத்த ஏற்பாடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தாண்டு டிசம்பரில் பார்லிமென்ட் கூட்டத்தொடர், புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடருடன் புதிய பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பார்லிமென்ட் கட்டடம் ரூ. 1250 கோடி செலவில் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை, டாடா நிறுவனம் பெற்றுள்ளது. பார்லிமென்ட் வளாகம் அடங்கிய, ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, புதிய பார்லிமென்ட் கட்டடம் முக்கோண வடிவில் அமைய உள்ளது.

latest tamil news

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். வரும், நவம்பர் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வரும் டிசம்பரில் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. இன்னும் சில பணிகள் நிறைவடையாததால், 2023 -ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை துவக்கி, பின் பட்ஜெட் கூட்டத்தொடரை புதிய பாராளுமன்ற வளாகத்தில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.