ஆசிய கிண்ண அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி
மகளிர் ஆசிய கிண்ண ரி 20 தொடரில் நேற்று (10) இலங்கை அணி பெற்ற வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் மழைக்கு மத்தியிலும் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் சில்ஹெட்டில் நேற்று (10) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன்போது நிலக்ஷி டி சில்வா 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தார்.
தொடர்ந்து மழை பெய்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு 7 ஓவர்களுக்கு 41 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் பங்களாதேஷ் பெண்கள் அணி 7 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்று போட்டியில் தேல்வியடைந்தது.
இலங்கை அணி இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றதனால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று (11) கடைசி குழுநிலை போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.