ஆசிய கிண்ண அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி

ஆசிய கிண்ண அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி

மகளிர் ஆசிய கிண்ண ரி 20 தொடரில் நேற்று (10) இலங்கை அணி பெற்ற வெற்றியுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் மழைக்கு மத்தியிலும் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் சில்ஹெட்டில் நேற்று (10) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன்போது நிலக்ஷி டி சில்வா 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தார்.

தொடர்ந்து மழை பெய்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு 7 ஓவர்களுக்கு 41 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் பங்களாதேஷ் பெண்கள் அணி 7 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்று போட்டியில் தேல்வியடைந்தது.

இலங்கை அணி இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றதனால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று (11) கடைசி குழுநிலை போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.