பெண் நக்சல் சுட்டுக் கொலை | Dinamalar

புவனேஸ்வர், ஒடிசாவில், பெண் நக்சல் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.
இங்கு, கந்தமால் மாவட்டத்தில் உள்ள சிந்தி வனப்பகுதியில், ஒடிசா சிறப்பு அதிரடிப்படையினர், மாவட்ட தன்னார்வப் படையுடன் இணைந்து, நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுஇருந்தனர்.

அப்போது, மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்; மற்றவர்கள் தப்பியோடினர்.

அப்பகுதியில இருந்து நக்சல்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.