தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 18 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்ந்திருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ.23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்ந்துள்ளது.