பரபரப்பு.. கடற்கரையில் கரை ஒதுங்கியது பச்சிளம் குழந்தையின் உடல்..!

வீராம்பட்டினம் கடற்கரையில், பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடற்கரையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், அந்த குழந்தை மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறி இருந்ததால், குழந்தையை கடலில் வீசிச் சென்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய சம்பவம் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.