சவுக்கு சங்கர் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு| Dinamalar

புதுடில்லி: நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக ‘யு டியூபர்’ சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது. அதையடுத்து அவர் முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு கடந்த கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை தண்டனைக்கு எதிராக சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா,, சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், அடுத்த விசாரணை வரை, எந்தவித கருத்துகளையும் தெரிவிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.