லோக்சபா தேர்தலுக்கு தயாராகுது திமுக: முகவர்களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை..!

லோக்சபா தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

வருகிற 2024-ம் ஆண்டு நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை (நவ.12-ம் தேதி) மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.