வரும் 18-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசு கல்லூரிகளில் விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில், நடப்பாண்டுக்கான உயல்கல்வி படிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், பொறியியல், மருத்துவ கலந்தாய்வு முடிந்து வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்கள் இல்லாத வகையில் நிரப்பப்படும்.

அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ம் தேதி வரை முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கையாக இருந்தாலும், கல்லூரி கட்டிடம் கட்டுவதாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.